Marcus Reid
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019
  • Home
  • October 2019 Agal
  • About
  • JUNE 2019
  • Press
  • Contact
  • JULY 2019
  • August 2019
  • SEPTEMBER 2019
  • November 2019
  • December 2019

ஆடிப் பெருக்கு - ராஜிவி நந்தகோபால்

7/19/2019

0 Comments

 
நீருக்கு நன்றி சொல்லும் விழாதான் ஆடிப்பெருக்கு!
 
நீருக்கு நம் என்ன ஓட்டங்கள் நன்றாகப் புரியும் என்பதால்தான் நம் முன்னோர்கள் நீரினை வழிபாடு செய்ய சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து சொன்னதை அப்போதே நம் முன்னோர்கள் நமக்கு விழாவாக கொண்டாட சொல்லி பழக்கியிருக்கிறார்கள்.
 
நீரைக் கையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்துதான் ரிஷிகளும் யோகிகளும் நல்லதைச் செய்வார்கள். மந்திரவாதிகள் தீமையையும் செய்வார்கள் ஏனெனில் நாம் ஜபிக்கும் மந்திரத்தின் ஷக்தியை நீர் மட்டுமே சுலபாக ஏற்று செயல் புரியும்.
 
ஆடியில் தொடங்கிய அனைத்தும் பல்கி பெருகும் என்பதால் ஆடிப்பெருக்கு அன்று விதை விதைப்பது மட்டுமன்றி வியாபாரத்தில் புதுக்கணக்கையும் துவங்குவார்கள். 

Picture
புராணத்தில் :
ராவணன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்த பாவம் தீர ஏதேனும் உபாயம் கூறும்படி ராமபிரான் தன்குலகுரு வசிஷ்டரிடம் கேட்டார் அதற்கு வசிஷ்டர்
“அறுபத்தாறு புனிதத் தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்ட காவிரியில் நீராடினால் அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்'' என்று கூறினார்.
 
அதன்படி ஸ்ரீ ராமபிரான் காவிரியில் நீராடிய நன்னாள்தான் ஆடிப்பெருக்கு.
 
காவிரிக்கரையில் பூமிக்கடியில் பதினெட்டு சித்தர்களும், யோகிகளும் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்வதாகவும், ஆடிப்பெருக்கு நாளன்று காவிரிக்கு தங்கள் தவப்பயனை வழங்குவதாகவும், அந்தத் தவப்பயனைப் பெற்ற காவிரி, அன்று தன்னில் தானே நீராடி தன்னை வழிபடும் மனிதர்களின் பாவங்களைப் போக்குகிறாளாம் ஆகவே ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் நீராடி
 
“கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தே
ஹிமே பக்தி முக்தி த்வம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி”
 
என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.
 
காவிரியில் ஆடிப்பெருக்கு :
தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. 
மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரித்தாய்.
 
காவிரித் தாய்க்கு காதோலை கருகமணி,
கார்போக அரிசியுடன் வெல்லமும் எள்ளும் கலந்த கலவை,
பழங்கள் மற்றும் தேங்காய் வெற்றிலை – பாக்கு,
மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றுடன்
சித்ரான்னங்களையும் படைத்து பூஜை செய்வார்கள்.
 
பூஜையில் வைத்த மஞ்சள் சரடை வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவரும் கழுத்தில் அணிந்துகொள்வார்கள். ஆண்கள் இதை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வர்கள்.
 
ஆடிப்பதினெட்டு அன்று, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பல்லக்கில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு வழிபாடுகள் நடைபெறும்.
 
ஆடிப்பெருக்கு சீர் என்று பிறந்த வீட்டிலிருந்து, திருமணம் செய்து கொடுத்த பெண்கள் அனைவருக்கும் சீர் கொடுப்பார்கள் அதே போல ஸ்ரீரங்க பெருமாளான ரங்கனும் தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுப்பார்.
 
அன்று மாலை நேரத்தில் ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து புடவை, தாலி, காதோலை கருகமணி, மலர் மாலை, தேங்காய், வெற்றிலை - பாக்கு, பழங்கள் ஆகிய மங்கல பொருள்களுடன் சீர் வரிசைகளை யானை மேல் ஏற்றி, மேள தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் படித்துறைக்கு எடுத்து வருவார்கள். 
 
அந்தச் சீர்வரிசைகளை அங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் முன் சமர்ப்பித்து பூஜை செய்வார்கள் பிறகு அந்த பொருட்களைக் காவிரித் தாய்க்கு வழங்குவார்கள்.
 
இவ்வருடமும் அனைவரும் சீரும் சிறப்புமாக ஆடி பெருக்கு வைபோகத்தை கொண்டாட வாழ்த்துகிறேன்.
 

0 Comments



Leave a Reply.

    Author

    Write something about yourself. No need to be fancy, just an overview.

    Archives

    July 2019

    Categories

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.